சட்டவிரோதமாக மீன்பிடி - 18 தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்!

சட்டவிரோதமாக மீன்பிடி - 18 தமிழக  மீனவர்கள் விளக்கமறியலில்!

மன்னார் - தாழ்வுப்பாடு பகுதியை அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதான 18 தமிழக மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் நேற்று கைதுசெய்யப்பட்ட குறித்த மீனவர்கள், மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளால் இன்று மாலை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, 18 மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.