மலையக ரயில் போக்குவரத்து சேவை சீராக்கப்பட்டுள்ளது!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலின் இயந்திரம் வட்டகொடை பகுதியில் ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டது.

மலையக ரயில் போக்குவரத்து சேவை சீராக்கப்பட்டுள்ளது!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலின் இயந்திரம் வட்டகொடை பகுதியில் ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் அனர்த்தம் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது ரயில் தடமேற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில், மலையகத்திற்கான ரயில் சேவையில் எவ்வித பாதிப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை. பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள 84 ரயில் செலுத்துனர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அவர்கள் உடனடியாக தமது பணிகளுக்கு திரும்பவில்லை எனில், சேவையிலிருந்து விலகியதாக கருதி கடிதம் மூலம் அறிவிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரயில் சாரதிகள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்புக்கு மத்தியில் இன்று பிற்பகல் முதல் அலுவலக மற்றும் அஞ்சல் உள்ளிட்ட 37 ரயில் சேவைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.