ரணிலின் காலடியில் விழுந்த தமிழ் அரசியல் கட்சிகள்: முன்வைக்கப்பட்ட விமர்சனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) திட்டிய பல தமிழ் அரசியல் கட்சியினர் இன்று அவரின் காலடியில் விழுந்து கிடப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Kajendran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (17.08.2024) ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ரணிலின் காலடியில் விழுந்த தமிழ் அரசியல் கட்சியினர் அவர் தான் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடியவர் என புதிய கதைகளை தற்போது கூறுகின்றனர்.

அத்துடன், தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாய் இருக்கின்றார்கள் என காட்டுவதற்கான ஒரு நாடகம்” எனக் கூறியுள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில்,

காணொளி - இணையம்