காளை மாடு மோதி நல்லூர் கோவில் பணியாளர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நந்தவன பராமரிப்பாளராக பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி உயிரிழந்துள்ளார். 

காளை மாடு மோதி நல்லூர் கோவில் பணியாளர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நந்தவன பராமரிப்பாளராக பகுதியில் பணியாற்றுமொருவர் காளை மாடு முட்டி உயிரிழந்துள்ளார். 

இருபாலையைச்  சேர்ந்த நித்தியசிங்கம் என்ற 60 வயது மதிக்கத்தக்க ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காளை மாட்டுக்கு உணவு வைக்க சென்ற போது காளை மாடு மோதி வீழ்ந்து காயமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.