கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது - தம்மிக பெரேரா (காணொளி)

கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது என்று DP கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது என்று DP கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

‘DP கல்வி நிலையம் மற்றும் தொழிநுட்ப வளாகத்தின் 60 ஆவது கிளை கண்டி மாவட்டத்தின் வல்கம் பிரிவிலுள்ள புஸ்ஸல்லாவ ஸ்ரீ மணிந்தாராம விகாரையில் திறந்து வைக்கப்பட்டது.

DP கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேராவினால் பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு குறித்த கிளை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. 

இதன்போது கருத்து வெளியிட்ட, DP கல்வி நிலையத்தின் தலைவர் தம்மிக பெரேரா, ஒரு நாட்டுக்கு பொருளாதாரம் மற்றும் அந்நிய செலாவணி போன்ற காரணிகள் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று கல்வி வளர்ச்சி மிக முக்கியமான தூணாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.