ஹிருணிகாவின் பதவி விலகல் கடிதம் மறுப்பு!

ஹிருணிகாவின் பதவி விலகல் கடிதம் மறுப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பிற்குரிய தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் சமர்ப்பிக்கப்பட்ட பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைமை மறுத்துள்ளது.

கொழும்பில் தனது தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக கூறி, இந்த பதவி விலகலை ஹிருணிகா சமர்ப்பித்த போதிலும் , அவரது பதவி விலகல் கடிதத்தை கட்சி ஏற்க மறுத்துள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சி மகளிர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக ஹிருணிகாவைத் தொடருமாறு கட்சி கோரிக்கை விடுத்துள்ளதுடன் அவர் அதற்குச் சம்மதித்துள்ளார் என்றும் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.