கனடா செல்லும் இலங்கையர்களுக்கு  விடுக்கப்பட்ட  அறிவிப்பு!  

கனடா செல்லும் இலங்கையர்களுக்கு  விடுக்கப்பட்ட  அறிவிப்பு!  

கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டின் குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலகத்திடம் எமது செய்தி சேவை வினவியது.
 
அதற்கு பதிலளித்த அதன் தகவல் தொடர்பு பிரதானி, கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களை வழமைபோல் பரிசீலிப்பது எமது கொள்கையாகும் என தெரிவித்தார்.