அதிகரித்துள்ள  காசநோயாளர்களின்  எண்ணிக்கை! 

அதிகரித்துள்ள  காசநோயாளர்களின்  எண்ணிக்கை! 

நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 14 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
 
அத்துடன் அடையாளம் காணப்பட்ட காசநோயாளர்களில் நாள் ஒன்றுக்கு இரண்டு பேர் மரணிப்பதாக அந்த வேலைத்திட்டம் குறிப்பிட்டுள்ளது.
 
2023 ஆம் ஆண்டில் மாத்திரம்  நாட்டில் 9, 358 காசநோயாளரகள் பதிவாகினர்.
 
இதுவே அண்மையில் பதிவான அதிகூடிய எண்ணிக்கையாகும்.
 
நாட்டில் அதிகளவான காசநோயாளர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு நகர எல்லையிலேயே பதிவாகியுள்ளனர்.