10 பேர்ச்சர்  காணி வேலைத்திட்டம்  எதிர்வரும் மே மாதத்தில்! 

10 பேர்ச்சர்  காணி வேலைத்திட்டம்  எதிர்வரும் மே மாதத்தில்! 

மலையகத்தில் உள்ள குடும்பங்களுக்கு 10 பேர்ச்சர் அளவிலான காணி உரிமையை வழங்கும் சௌமிய பூமி வேலைத்திட்டத்தை, எதிர்வரும் மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் பிறந்த தினத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ள குறித்த சௌமிய பூமி வேலைத்திட்டத்தில் சுமார் 100,075 குடும்பங்கள் பயனடைவார்கள் என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.