வேதன அதிகரிப்பு குறித்து  மத்திய வங்கியின் அதிகாரிகள்  விளக்கம்! 

வேதன அதிகரிப்பு குறித்து  மத்திய வங்கியின் அதிகாரிகள்  விளக்கம்! 

எந்தவொரு தரப்பினருக்கும் அறியப்படுத்தாமல் ஊழியர்களின் வேதனத்தை அதிகரித்தமை தொடர்பில், விளக்கமளிப்பதற்காக மத்திய வங்கியின் அதிகாரிகள் இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் மற்றும் அரச நிதிப்பற்றிய குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.
 
ஊழியர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில், மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க அமைச்சரவையில் நேற்று விளக்கமளித்திருந்தார்.
 
இந்தநிலையில், அவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம் மற்றும் அரச நிதிப்பற்றிய குழுவில் முன்னிலையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மத்திய வங்கியின் ஊழியர்களின் வேதனம் 70 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டமையினால் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
 
அரச நிறுவனங்களின் செலவினத்தை கட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ள காலத்தில் இவ்வாறான வேதன அதிகரிப்பு குறித்து விளக்கம் கோருவதற்காகவே, மத்திய வங்கியின் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.