கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவை பகுதி மூடப்படும்!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவை பகுதி மூடப்படும்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின், கீழ் கடுகண்ணாவை பகுதி நாளை (28) மூடப்படவுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள ஆபத்தான கற்பாறைகள் அகற்றப்படவுள்ளதன் காரணமாக குறித்த பகுதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை அல்லது இரவு 09.00 மணி முதல் 11.00 மணி வரை குறித்த வீதிப் பகுதி மூடப்படுமென அதன் சிரேஷ்ட புவியியலாளர் லக்சிறி இந்திரதிலக தெரிவித்துள்ளார்.