விஷம் கலந்த நீரை பருகிய ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

விஷம் கலந்த நீரை பருகிய ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஷம் கலந்த நீரை பருகிய  ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

விஷம் கலந்த நீரை பருகிய ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் குருணாகலை - நாரம்மல பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இன்று இடம்பெற்றுள்ளது.

10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே விசக்கலவையுடனான நீரை பருகியுள்ளனர்.

10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் அதே தரத்தில் கல்வி கற்கும் சக மாணவிகளுடன் ஏற்பட்ட குரோதத்தினால் மாணவிகளின் தண்ணீர் போத்தல்களில் விசத்தை கலந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.