பொருளாதார உரிமைகள் மீறப்படும் போது நடவடிக்கை எடுக்க தயார் - ஜனாதிபதி

பொருளாதார உரிமைகள் மீறப்படும் போது நடவடிக்கை எடுக்க தயார் - ஜனாதிபதி

இலங்கையில் பொருளாதார உரிமைகள் மீறப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாரென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை கடற்படை முகாமில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

செங்கடலில் இலங்கையின் பொருளாதார உரிமைகளுக்கு ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படும் பட்சத்தில், அதற்கு எதிரான செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வலய – உலகளாவிய பிரச்சினைகளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் வேலைத்திட்டங்களுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கை வழங்கும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.