எல்பிட்டிய மிரிஸ்வத்த பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

எல்பிட்டிய மிரிஸ்வத்த பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

எல்பிட்டிய, மிரிஸ்வத்த பகுதியில் உள்ள கால்வாயில் இன்று (23) காலை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலம் கண்டெடுக்கப்பட்ட போது, அது மிகவும் வீங்கியும் சிதைந்தும் காணப்பட்டமையால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது கொலையா அல்லது தற்கொலையா அல்லது வேறு விபத்தா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.