மொஸ்கோ இசைநிகழ்ச்சியில் - கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வு! 

மொஸ்கோ இசைநிகழ்ச்சியில் - கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்வு! 

மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

குரோகஸ் சிட்டியின் இசைநிகழ்ச்சி அரங்கில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது என ரஷ்யாவின் விசாரணை குழு தெரிவித்துள்ளது.

அரங்கில் மேற்கொள்ளப்பட்ட  சோதனை நடவடிக்கைகளின் போது மேலும் உடல்களை மீட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது

இதேவேளை இந்த தாக்குதலுடன்  நேரடியாக தொடர்புபட்ட நால்வரை கைது செய்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.