இத்தாலியில் படகு விபத்தில் 41 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

இத்தாலியின் லம்பெடுஸா (Lampedusa) எனப்படும் தீவில் இடம்பெற்ற படகு விபத்தில் 41 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் படகு விபத்தில் 41 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

இத்தாலியின் லம்பெடுஸா (Lampedusa) எனப்படும் தீவில் இடம்பெற்ற படகு விபத்தில் 41 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காணாமல் போனோரை தேடும் பணிகள் இடம்பெற்று  வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன..

துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட அந்த படகு இத்தாலியின் கரைக்கு செல்லும் வழியில் எடை தாழாமல் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், படகிலிருந்து தப்பிய நான்கு பேர் மீட்புப் படையினரிடம் விபத்து குறித்த விபரங்களை கூறியுள்ளனர். 

லம்பெடுஸா இத்தாலியின் தெற்கே உள்ள தீவாகும்.

2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து, குறிப்பாக லிபியாவிலிருந்து சென்று, குடியேறுபவர்களுக்கான முக்கிய ஐரோப்பிய நுழைவு வாயிலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.