தமிழ்நாட்டில் சிக்கிக் கொண்ட இலங்கை மீனவர்கள்!

தமது படகு பழுதடைந்ததால் இலங்கை மீனவர்கள் மூவர் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் சிக்கிக் கொண்ட இலங்கை மீனவர்கள்!

தமது படகு பழுதடைந்ததால் இலங்கை மீனவர்கள் மூவர் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளனர்.

யாழ்ப்பாணம் - எழுகை தீவில் இருந்து கடந்த 6ஆம் திகதி காலை 9 மணிக்கு பைபர் படகில் அவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

அன்று மதியம் 2 மணியளவில் இயந்திரம் பழுதடைந்ததால் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மூன்று மீனவர்களும் கரையொதுங்கியுள்ளனர். 

யாழ்ப்பாணம் மாவட்டம் ஆனைகோட்டை, குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை பகுதிகளை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு தமிழக கரையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.