இந்தியாவில் மீண்டும் ரயில் விபத்து - சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்தியாவில் மீண்டும் ரயில் விபத்து - சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்!

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

அந்த மாநிலத்தின் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ ரயில் நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

இதில் 12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது . 

விபத்தில் ஒரு ரயிலின் ஓட்டுனருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகளை மீட்டு பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

விபத்தின் காரணமாக கரக்பூர் - பாங்குரா - ஆத்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.