கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாது - அரிசி ஆலை உரிமையாளர்கள்!

கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாது - அரிசி ஆலை உரிமையாளர்கள்!

அரிசி ஆலை உரிமையாளர்கள் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் அரிசியை விற்பனை செய்வதில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சிலர் கட்டுப்பாட்டு விலையில் வழங்க ஒப்புக்கொண்டுள்ள நிலையில், மற்றவர்கள் இது தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று மறுத்துவிட்டனர்.

பிரபல அரிசி வர்த்தகர் டட்லி சிரிசேன ஒரு கிலோ நாட்டு நெல்லை 122 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய முடியாது எனவும், ஒரு கிலோ அரிசியை 220 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தற்போதைய வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி வழங்க பொலன்னறுவை மாவட்ட அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் அகில இலங்கை அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டு அரிசிக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாடு, நாட்டு நெல் விளைச்சல் குறைவாக இருப்பதே காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். 

விவசாயிகள் நாட்டு நெல் சாகுபடியை குறைத்துவிட்டதாகவும், 80 சதவீதத்துக்கும் அதிகமான நெல் சாகுபடியாளர்கள் கீரி சம்பா சாகுபடியை மேற்கொள்வதாகவும் அவர் கூறினார். 

நெல் சாகுபடியில் இந்த ஏற்றத்தாழ்வைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, பாரிய அரிசி உற்பத்தியாளர் டட்லி சிறிசேனவின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்ய முடியாது எனவும் மாரந்தகஹமுலவின் அகில இலங்கை நடுத்தர மற்றும் சிறு அரிசி வியாபாரிகள் சங்கம் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தது.

டட்லி சிறிசேனவின் கூற்றை பின்பற்றினால் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி வியாபாரிகள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என மரந்தகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் பீ.கே.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தற்போது நெல்லின் விலை 130 ரூபாய் தொடக்கம் 132 ரூபாய் வரை காணப்படுவதாகவும், அதிக நஷ்டத்தை ஏற்படுத்தி அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகள் அதிக வட்டிக்கு தனியாரிடம் கடன் பெற்றுள்ளதாகவும், கடனை அடைக்க வழியின்றி விவசாயிகள் தவிப்பதாகவும் தெரிவித்தார்.