இலங்கை அணியின் மூத்த ரசிகரின் வீட்டிற்கு சென்ற ரோஹித் சர்மா குழுவினர்!

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிக்காக வந்துள்ள இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா இலங்கை அணியின் மூத்த ஆதரவாளரும் மைதானத்தில் ஊக்குவிப்பவருமான பெர்ஸி அபேசேகரவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

இலங்கை அணியின் மூத்த ரசிகரின் வீட்டிற்கு சென்ற ரோஹித் சர்மா குழுவினர்!

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பெர்ஸி அபேசேகர அண்மைக்காலமாக விளையாட்டு போட்டிகளின் போது பங்கேற்பதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் கிரிக்கட் விளையாட்டு தொடர்பில் ஆர்வத்துடனேயே உள்ளார்.  இந்தநிலையில், அவரை சந்தித்து நலன் விசாரிப்பதற்காக இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா உள்ளிட்ட குழுவினர் கொழும்பில் உள்ள இல்லத்திற்கு சென்றிருந்தனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஆசியக் கிண்ணம் 2023 சூப்பர் 4 போட்டிகளுக்காக இந்திய அணி கொழும்பில் தங்கியுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் 12 ஆம் திகதியன்று போட்டிகளை நடத்தும் இணை நாடான இலங்கையை எதிர்கொள்கிறது.

முன்னதாக இந்திய அணி தனது சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியை பாகிஸ்தான் அணியுடன் எதிர்கொள்கின்றது.
 
இதற்கிடையில், ரோஹித் வெள்ளிக்கிழமை பெர்ஸி அபேசேகரவின் இல்லத்திற்கு சென்று இந்திய ரசிகர்களின் சார்ப்பில் தனது அன்பை வெளிப்படுத்தினார். 

புகழ்பெற்ற இலங்கை ஆதரவாளர் சமீப காலமாக நோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரோஹித்தின் வருகை அவரையும் அவரது குடும்பத்தினரையும்  உற்சாகப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் ஷர்மா மற்றும் விராத் கோஹ்லியை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பெர்ஸி அபேசேகர முன்பு தெரிவித்திருந்தார், இறுதியாக அவரது கனவு தற்போது  நிறைவேறியுள்ளது.