மட்டக்குளி  பகுதியில் துப்பாக்கி சூடு  - துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்தவர் கைது!

மட்டக்குளி  பகுதியில் துப்பாக்கி சூடு  - துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பித்தவர் கைது!

மட்டக்குளி – அலிவத்தை பகுதியில் அலிவத்தை விராஜ் என்பவரை இலக்கு வைத்து நேற்றைய தினம் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த இருவர் துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக விசேட விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ரிவோல்வர் ரக துப்பாக்கியில் இந்த பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதேநேரம் துப்பாக்கி சூட்டில் இருந்து அலிவத்தை விராஜ் என்ற நபர் தப்பியுள்ளார்.

இந்தநிலையில் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் வீட்டின் மீது அலிவத்தை விராஜின் நண்பர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனடிப்படையில் அலிவத்தை விராஜ் என்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மட்டக்களப்பு - வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சூடுபத்தினசேனை பகுதியில் கொக்கினை வேட்டையாட சென்ற இருவரில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் வேட்டையாட சென்ற மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வேட்டையாட சென்ற சந்தர்ப்பத்தில் துப்பாக்கி தவறுதலாக இயங்கியிருக்கலாம் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் செம்மன் ஓடையைச் சேர்ந்த 32 வயதான ஒருவரே உயிரிழந்தார்.