கடலில் மூழ்கிய தென் கொரிய கப்பல்!

கடலில் மூழ்கிய தென் கொரிய கப்பல்!

தென் கொரிய சரக்குக் கப்பலொன்று, ஜப்பானிய தீவின் அருகே சென்று கொண்டிருந்த போது கடலில் மூழ்கியுள்ளது. இதில் கடலில் தத்தளித்த நால்வர் மீட்கப்பட்ட நிலையில் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

 ஜப்பானின் முட்சுர் தீவுக்கு அருகில் “கியோயங் சன்“ என்ற இரசாயனக் கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதாக ஜப்பானிய கடலோரக் காவல்படையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். குறித்த கப்பலில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேர், தென் கொரியாவைச் சேர்ந்த 2 பேர், சீனாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 ஊழியர்கள் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த கப்பல் ஜப்பானிய தீவுக்கருகே மூழ்கத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து கப்பலிலிருந்த ஊழியர்கள் கடலில் குதித்துள்ளனர். 

இந்நிலையில் அங்கு விரைந்த மீட்புப் படையினர் கடலில் தத்தளித்த ஊழியர்கள் நால்வரை மீட்டனர். இதில் 7 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.