விசேட சுற்றிவளைப்புகளில் 697 சந்தேகநபர்கள் கைது!

விசேட சுற்றிவளைப்புகளில் 697 சந்தேகநபர்கள் கைது!

இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 697 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைதானவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 பேரும், குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 138 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்களில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் காவல்துறை விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் உள்ளடங்கியிருந்த 6 சந்தேகநபர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     

அத்துடன், இந்த நடவடிக்கைகளின்போது, 170 கிராம் ஹெரோயின், 113 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 814 கிராம் கஞ்சாவும் 26,186 கஞ்சா செடிகள் உள்ளிட்ட மேலும் பல சட்டவிரோத போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.