கொள்ளையிட்ட நகையில் காதலர் தின பரிசு - யாழில் சம்பவம்

கொள்ளையிட்ட நகையில் காதலர் தின பரிசு - யாழில் சம்பவம்

காதலர் தினத்தில் மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண் ஒருவருமே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதலர் தினத்தன்று வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள வீடொன்றில் 29 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று யாழ்ப்பாணத்தில் 4 பவுண் நகைகளை அடகு வைக்க சென்றபோது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அந்த பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பிரதான சந்தேக நபர் 25 பவுண் நகையுடன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக வல்வெட்டித்துறை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுனர்.