நேபாள நிலநடுக்கம் - இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அங்கு வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என நேபாளத்துக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

நேபாள நிலநடுக்கம் - இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை!

100 இலங்கையர்கள் வரை நேபாளத்தில் வசித்து வருவதாகவும் காத்மண்டு மற்றும் பொக்கராவில் அவர்கள் வசித்து வருவதாகவும் நேபாளத்துக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

மேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 150க்கும் அதிகமானோர் பலியாகியதுடன், 160க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

6.4 மெக்னிடியூட் அளவில் குறித்த நில அதிர்வு பதிவாகியதுடன், அது இந்தியாவின் சில பகுதிகளில் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.