தமிழரசு கட்சி வழக்கு விவகாரம்: மனுதாரரின் கோரிக்கைக்கு இணங்கும் 6 பிரதிவாதிகள்

தமிழரசு கட்சி வழக்கு விவகாரம்: மனுதாரரின் கோரிக்கைக்கு இணங்கும் 6 பிரதிவாதிகள்

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் சபை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் மனுதாரர்களின் கோரிக்கைக்கு இணங்குவதாக 6 பிரதிவாதிகள் மன்றில் அறிவித்துள்ளனர்.

குறித்த மனு திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது, மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள 7 பேரில் 6 பேர் இன்று மன்றில் முன்னிலையானதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி, மனுதாரர்கள் கோரியுள்ள விடயங்களுக்கு இணங்குவதாக குறித்த 6 பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா அறிவித்தார்.