நரேந்திர மோடிக்கான கடிதத்தில் தமிழ்க் கட்சிகள் கையொப்பம்!

தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் பல கட்சிகள் இணைந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில், நாளைய தினம், குறித்த கட்சிகள் கையொப்பமிடவுள்ளன.

நரேந்திர மோடிக்கான கடிதத்தில் தமிழ்க் கட்சிகள் கையொப்பம்!

தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் பல கட்சிகள் இணைந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பவுள்ள கடிதத்தில், நாளைய தினம், குறித்த கட்சிகள் கையொப்பமிடவுள்ளன.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின், இந்திய விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில், தமிழ்க் கட்சிகள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன.

 குறித்த கடிதத்தில் கையொப்பமிடுவற்கு, தங்களுக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்கும் இடையில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் யாழ்ப்பாணத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

 இலங்கை தமிழரசு கட்சி, தவிர்ந்த ஏனைய பல கட்சிகள் குறித்த கடிதத்தில் கையொப்பமிடும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.