டிக்கோயா வனராஜா வழிப்பிள்ளையார் ஆலயத்தின் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை - சிசிரிவி கமராவில் பதிவு!

டிக்கோயா வனராஜா வழிப்பிள்ளையார் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு சுமார் 30,000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாகவும் குறித்த திருட்டு சம்பவம் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவில் பதிவாகியுள்ளதாக ஆலயத்தின் குருக்கள் தெரிவித்தார்.

டிக்கோயா வனராஜா வழிப்பிள்ளையார் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு சுமார் 30,000 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாகவும் குறித்த திருட்டு சம்பவம் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவில் பதிவாகியுள்ளதாக ஆலயத்தின் குருக்கள் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நோர்வூட் பிரதான விதியில் வனராஜா பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் நேற்று (09) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தில் போடப்பட்டிருந்த பூட்டினை அறுத்த சந்தேக நபர் ஆலயம் உள்ளிருந்த உண்டியலை தள்ளிக்கொண்டு வரும் காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸ் கோட்டத்தின் கைரேகை அடையாளப்பிரிவு மற்றும் மோப்ப நாய் பிரிவு ஆகியன இணைந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

இது குறித்து ஆலயத்தின் குருக்கள் கருத்து தெரிவிக்கையில் ஆலயத்திலிருந்து உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தாகவும் இது ஆலயத்தின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த பூட்டுக்கள் கழற்றப்பட்டிருந்தாகவும் அதனை தொடர்ந்து குறித்த திருட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு கொடுத்ததாகவும் வழமையாக 15 நாட்களுக்கு ஒரு தடவை ஆலயத்தின் உண்டியலில் உள்ள காசினை எடுப்பதாகவும் அப்போது வழமையாக (30000) முப்பாதாயிரம் ரூபா வரை இருப்பதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.