ரயிலில் மோதி உயிரிழந்த நபரின் சடலம் அடையாளம் காணப்படவில்லை!

ரயிலில் மோதி உயிரிழந்த நபரின் சடலம் அடையாளம் காணப்படவில்லை!

நானுஓயா ரயில்  நிலையத்திற்கு அருகில் அண்மையில் ரயில்  ஒன்றில் மோதி உயிரிழந்த வயோதிபரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
குறித்த சடலம் தொடர்ந்தும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 11ஆம் திகதி பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயில்  ஒன்றில் மேதுண்டு,  குறித்த  நபர்  உயிரிழந்தார்.

உயிரிழந்தவர், 50 முதல் 55 வயது மதிக்கத்தக்கவர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 
அவரை பொறுப்பேற்பதற்கு எவரும் இதுவரை முன்வரவில்லை என வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிடுகின்றன.