வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!

வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!

வெனிசுலாவைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களையும், சட்டவிரோத குடியேற்ற வாசிகளையும் எல் சால்வடாரில் உள்ள சிறைக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு டொனால்ட் ரம்ப் தலைமையிலான அரசு திருப்பி அனுப்பி வருகிறது. மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், வெனிசுலாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை ட்ரம்ப் தலைமையிலான அரசு அனுப்பி வைத்துள்ளது.

அமெரிக்காவில் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடைத்து வைப்பதற்காக, பயன்படுத்தப்பட்ட வனப்பகுதியை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள தனிமை சிறையிலேயே அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்காலத்தில் மட்டுமே பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பிரத்யேக சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு முன் இப்படி கைதிகளை வேறு நாட்டு சிறைக்கு அனுப்பிய நடவடிக்கை இரண்டு முறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் சட்டத்தை 14 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களை சிறையில் வைத்து பராமரிக்கத் தேவையான நிதியுதவியையும் அளிக்க எல் சால்வடார் நாட்டுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

.