முசாரஃப்பின் கட்சி உறுப்புரிமையை நீக்கும் தீர்மானம் சட்டத்துக்கு முரணானது

முசாரஃப்பின் கட்சி உறுப்புரிமையை நீக்கும் தீர்மானம் சட்டத்துக்கு முரணானது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முசாரஃப்பின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் சட்டத்துக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தம்மை கட்சியிலிருந்து நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி அவர் தாக்கல் செய்த மனு, பிரியந்த ஜயவர்தன தலைமையிலான மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.