மகளின் பாதணி வவுச்சரை விற்று மதுபானம் அருந்திய தந்தை!

மகளின் பாதணி வவுச்சரை விற்று மதுபானம் அருந்திய தந்தை!

பாடசாலையில் பாதணிகளுக்காக மகளுக்கு வழங்கப்பட்ட வவுச்சரை விற்று தந்தை ஒருவர் மதுபானம் அருந்திய சம்பவம் திஸ்ஸமஹாராம பகுதியில் பதிவாகியுள்ளது.

பாதணிகளுக்காக  வழங்கப்பட்ட இலவச வவுச்சர்களின் ஊடாக பாதணிகளை கொள்வனவு செய்ய முடியும் என்ற  போதிலும், பாதணிகளின் பாடசாலைக்கு வரும் மாணவர்களை அழைத்து ஆசிரியர்கள் நடத்திய விசாரணையின் போது குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

மேலும், பல பெற்றோர்கள் பாதணி வவுச்சரை விற்று உருளைக்கிழங்கு, பருப்பு போன்ற பொருட்களை கொள்வனவு செய்துள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது.