பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

பாண் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை (26) அறிவிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

பாணின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதன்படி பாணின் விலை குறைக்கப்படுமா என்பது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.