இலங்கையில் பக்கவாதத்திற்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரிப்பு!

இலங்கையில் அண்மைக் காலமாக  பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பக்கவாதத்திற்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரிப்பு!

குறிப்பாக 25 வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவரின் உரையாடலின் போது வார்த்தை பிரயோகங்களில் ஏற்படும் தடுமாற்றம் மற்றும் முகத்தின் ஒரு பக்கம் இழுப்பது போன்றவை பக்கவாதத்துக்கான அறிகுறிகள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பக்கவாதம் காரணமாக உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  அவர்களில் 51 சதவீதமானோர் ஆண்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கையில் இரண்டு இலட்சம் பேர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹர்ஷ குணசேகர தெரிவித்துள்ளார்.

------------------------------------------------------------------------------------