உயிரை மாய்த்துக் கொண்ட காவல்துறை சார்ஜன்ட்

உயிரை மாய்த்துக் கொண்ட காவல்துறை சார்ஜன்ட்

மாத்தறை – கொடவில நீதவான் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தமது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது

உயிரிழந்தவர், கொடவில காவல்துறை நிலையத்தில் கடமையாற்றிவந்த 52 வயதுடைய காவல்துறை சார்ஜன்ட் ஒருவரென தெரியவந்துள்ளது.

நீண்ட நாட்களாக சுகயீன விடுமுறையில் இருந்து, இன்று மீண்டும் கடமைக்கு திரும்பிய அவர், கொடவில நீதிமன்ற வளாகத்தில் உள்ள காவலரணில் வைத்து இவ்வாறு தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.