மதுவரித் திணைக்கள அதிகாரியை தாக்கியவர்கள் கைது!

மத்துகமை பிரதேசத்தில் சட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காகச் சென்ற மதுவரித் திணைக்கள அதிகாரியொருவரை ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த 245,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மதுவரித் திணைக்கள அதிகாரியை தாக்கியவர்கள் கைது!

மத்துகமை பிரதேசத்தில் சட்டவிரோத போதைப்பொருள் சுற்றிவளைப்புக்காகச் சென்ற மதுவரித் திணைக்கள அதிகாரியொருவரை ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த 245,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

களுத்துறை குற்றவியல் விசாரணை பிரிவினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரிடம் இருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

30 மற்றும் 33 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.