வவுனியாவில் கிணற்றில் இருந்து 14 கைக்குண்டுகள் மீட்பு!

வவுனியாவில் மூன்றுமுறிப்பு பகுதியில் கிணற்றில் இருந்து 14 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் கிணற்றில் இருந்து 14 கைக்குண்டுகள் மீட்பு!

வவுனியா பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட மூன்றுமுறிப்பு, தச்சங்குளம் பகுதியில் உள்ள தனியாரின் காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே குறித்த  கைக்குண்டுகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் பொருட்கள் ஏதோ இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர் உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸாரின் உதவியுடன்  கிணற்றை சோதனையிட்ட போது 14 கைக்குண்டுகளும் வேறு சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

தற்போது குறித்த இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.