303 இந்தியர்கள் ஆட்கடத்தல் - பிரான்ஸில் இருவர் கைது! 

303 இந்தியர்களுடன் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் விமானம் ஒன்று பிரான்ஸில் தரையிறக்கியுள்ளது.

303 இந்தியர்கள் ஆட்கடத்தல் - பிரான்ஸில் இருவர் கைது! 

இதுகுறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

300க்கும் மேற்பட்ட இந்திய பயணிகளுடன் துபாயில் இருந்து நிகரகுவா நோக்கிச் பயணித்த விமானம் தொழில்நுட்ப கோளாறு என்ற அடிப்படையில் பிரான்ஸில் தரையிறக்கப்பட்டது.

இதன்போதே இந்த விமானத்தில் பயணித்தவர்கள் 'ஆட் கடத்தலில்' சிக்கியவர்கள் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஆட் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரோமானிய நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானத்தில் இருக்கும் இந்திய பயணிகள் அமெரிக்கா அல்லது கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக மத்திய அமெரிக்காவிற்குச் செல்ல எண்ணியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.