ஜல்லிக்கட்டு போட்டி - 17 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு - 48 பேர் படுகாயம்

ஜல்லிக்கட்டு போட்டி - 17 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு - 48 பேர் படுகாயம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஒன்றான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று [15] இடம்பெற்றது.

நேற்று காலை ஆரம்பமான இந்த போட்டியில், 17 காளைகளை அடக்கிய கார்த்தி என்ற மாடுபிடி வீரர் முதலிடம் பெற்றதுடன், அவருக்கு முதலமைச்சரினால் கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

10 சுற்றுகளாக இடம்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் 825 காளைகள் பங்குபற்றியதுடன், 300க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் கண்டிருந்தனர்.

அதேநேரம், இந்த போட்டியில் வெற்றி பெற்ற காளையொன்றின் உரிமையாளரான ஜி.ஆர் கார்த்திக் என்பவருக்கு கார் ஒன்று ஒன்று வழங்கப்பட்டது.

இதேவேளை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தலைமை காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 48 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில், 19 மாடுபிடி வீரர்கள், 25 காளை உரிமையாளர்கள், 2 பார்வையாளர்கள் 2 காவல்துறை உத்தியோகத்தர்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.