யஷஸ்வி ஜெய்ஸ்வால் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் - சுரேஷ் ரெய்னா!

நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் - சுரேஷ் ரெய்னா!

ஜெய்ஸ்வால் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடக்கூடியவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அதே எண்ணத்துடனேயே, அவர் விளையாடக்கூடிய வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற டெஸ்ட் தொடர் ஒன்றில் அவர் சதமடித்துள்ளார்.

உலகக் கிண்ண தொடரும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் இடம்பெறவுள்ளமையினால் அவருக்கு சாதகமாக அமையும் என தாம் கருதுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.