54 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் சென்னையில் பறிமுதல்!

  இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து சுமார் 54 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை தமிழக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சென்னையில் வைத்து பறிமுதல் செய்துள்ளனர்.

54 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் சென்னையில் பறிமுதல்!


 
இலங்கையின் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரிடம் இருந்து சுமார் 54 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருளை தமிழக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சென்னையில் வைத்து பறிமுதல் செய்துள்ளனர்.

இதன்போது அவரிடம் இருந்து 2 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, பெரம்பூரை சேர்ந்த அக்பர் அலி என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து, அவர் பதுக்கி வைத்திருந்த 54 கிலோ மெத்தாம்பெட்டமைனை பறிமுதல் செய்தனர். 

மியான்மரில் இருந்து மணிப்பூரில் உள்ள மோரே வழியாக இந்த கடத்தல் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் இந்திய தென்மண்டல போதைப்பொருள் தடுப்பு பிரிவினால், போதைப்பொருள் வலையமைப்பில் தொடர்புடைய 67 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பெருமளவான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன