அமெரிக்க பயணக்கைதிகளை விடுவித்த வெனிசுவலா

அமெரிக்க பயணக்கைதிகளை விடுவித்த வெனிசுவலா

அமெரிக்கா- வெனிசுவெலா ஆகிய நாடுகளுக்கிடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே 10 அமெரிக்கர்களை வெனிசுவெலா சிறைப்பிடித்தது.

அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டது.

இந்நிலையில் வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை தென் அமெரிக்க நாட்டிற்கான ஜனாதிபதி ட்ரம்பின் சிறப்புப் தூதுவர் ரிச்சர்ட் கிரெனெல் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் 6 அமெரிக்க பணயக்கைதிகளை வெனிசுவெலா அரசு விடுதலை செய்துள்ளது.

இதை ட்ரம்ப் உறுதி செய்துள்ளார். அதேவேளையில் இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.