நைஜீரியா ஆற்றில் படகு விபத்து: 26 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் உள்ள நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியா ஆற்றில் படகு  விபத்து: 26 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் நைஜர் மாகாணம் மொக்வா நகரில் உள்ள ஆற்றில் 100 பேர் படகில் பயணம் மேற்கொண்டனர். 

அண்டை நகரில் விவசாய பணிக்காக இவர்கள் படகில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜர் ஆற்றில் பயணம் மேற்கொண்டபோது இவர்கள் சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் சிக்கித்தவித்த 30 பேரை உயிருடன் மீட்டனர். 

ஆனால், இந்த படகு விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேவேளை, படகு விபத்தில் பலர் காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.