நாட்டின் பல பகுதிகளில் - வானிலை அறிக்கை
![நாட்டின் பல பகுதிகளில் - வானிலை அறிக்கை](https://tamilvisions.com/uploads/images/202502/image_870x_67ad64a8cab56.jpg)
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்.
அதிகாலை வேளையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர் காலநிலையை எதிர்பார்க்கலாம்.
நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
காற்று:
காற்று வடகிழக்கு திசையில் வீசும் மற்றும் வேகம் மணிக்கு (25-35) கி.மீ. வரை காற்றின் வேகம் அதிகரிக்கலாம்
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு கி.மீ. (45-50) ஆக காணப்படும்.
கடல் நிலை:
கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.