கட்சியை விட்டு எவர் சென்றாலும் சஜித் இருப்பார்: சமிந்த விஜேசிறி!

கட்சியை விட்டு எவர் சென்றாலும் சஜித் இருப்பார்: சமிந்த விஜேசிறி!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை விட்டு எவர் சென்றாலும் சஜித் பிரேமதாச கட்சியில் இருப்பார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச கட்சியை கைவிட மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

தலதா அதுகோரள போன்றவர்கள் கட்சியை விட்டும் நாடாளுமன்ற உறுப்புரிமையை விட்டும் நீங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தலதாவினால் ஐக்கிய தேசியக்கட்சிக்கு சென்று அங்கு இருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.