மனைவியின் கத்திக்குத்துக்கு இலக்கான கணவன் உயிரிழப்பு!

நுவரெலியா பொலிஸ் பிரிவிட்குட்பட்ட இலக்கம் 28 விஜிதபுறப் பகுதியில் நேற்று (23) சனிக்கிழமை இரவு கத்திக்குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மனைவியின் கத்திக்குத்துக்கு இலக்கான கணவன் உயிரிழப்பு!

நுவரெலியா பொலிஸ் பிரிவிட்குட்பட்ட இலக்கம் 28 விஜிதபுறப் பகுதியில் நேற்று (23) சனிக்கிழமை இரவு கத்திக்குத்துக்கு இலக்கான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது விஜித்த புற மார்கஸ் தோட்டத்தில் தனது வீட்டில் வைத்து கணவன் மனைவி கிடையே இரவு 11 மணி அளவில் வாக்குவாதம் எழுந்துள்ளது.

 தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கை கலப்பாக மாறிய நிலையில் மனைவியினால் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகிய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 இவ்வாறு உயிரிழந்தவர் இலக்கம் 28 விஜிதபுறப் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பஹிதரன் சந்திரசேகரன் என்பவராவார்.

சந்தேக நபரான பெண்ணை கைது செய்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-----------------------------------------