மலேசியாவில் 3 இலங்கையர்கள் உயிரிழப்பு - தேடப்படும் மேலும் 2 இலங்கையர்!

மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு இலங்கையர்களை தேடி வருவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் 3 இலங்கையர்கள் உயிரிழப்பு - தேடப்படும் மேலும் 2 இலங்கையர்!

மலேசியாவின் சென்டுல் பகுதியில் மூன்று இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பேரை சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கோலாலம்பூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சென்டுல் பகுதியிலுள்ள இலங்கை தம்பதியருக்கு சொந்தமான வீடொன்றில் 22ஆம் திகதி இரவு கொலைகள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீட்டில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்த தம்பதியின் 20 வயதுடைய மகனும், இரண்டு இலங்கையர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

சுமார் 02 நாட்களுக்கு முன்னர் குறித்த வீட்டுக்கு மேலும் இரு இலங்கையர்கள் வந்திருந்த நிலையில், அவர்கள் இந்தக் கொலைகளை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மலேசிய பொலிஸார் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், வீட்டை சோதனை செய்த பொலிஸார், மூவரின் சடலங்களையும் கண்டெடுத்துள்ளனர்.

இரண்டு இலங்கையர்களின் புகைப்படங்களை பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

மலேசிய பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

____________________________________________________

Advertisements >>>