பெண்ணொருவரின் முறைப்பாட்டுக்கு அமைய பிரபல வர்த்தகர் சரணடைந்தார்!

2018ஆம் ஆண்டு பெண்ணொருவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பிரபல வர்த்தகர் பிரியான் மெனிக் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

பெண்ணொருவரின் முறைப்பாட்டுக்கு அமைய பிரபல வர்த்தகர் சரணடைந்தார்!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் அவரை கைது செய்யுமாறு விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே அவர் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு காலி முகத்திடலுக்கு அருகில் 43 வயதான பெண்ணொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

5 வருடங்களின் பின்னர் குறித்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், சட்டமா அதிபரின் கருத்துகளுக்கு அமைய, குறித்த நபரை கைது செய்யுமாறு நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டது. 

அவர் நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக முன்னியாகியதுடன், 5 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.