வற் வரியை சிறுபோகத்தில் நீக்க திட்டம்!

இரசாயன உரங்களுக்கான வற் வரியை அடுத்த சிறுபோக பருவத்தில் நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

வற் வரியை சிறுபோகத்தில் நீக்க திட்டம்!

இதன்படி, நாட்டில் தற்போது விற்பனை செய்யப்படும் யூரியா, ஆழு, டீஎஸ்பி போன்ற இரசாயன உரங்களுக்கு வற் வரியை சேர்த்து அவற்றின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த முறை பெரும்போகத்துக்கு தேவையான அனைத்து இரசாயன உரங்களும் பழைய விலையிலேயே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

எனவே வற் வரி அறவிடப்படாததால் உரங்களின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.