மாவீரர் வாரத்தை முன்னிட்டு அச்சுவேலி நகர் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிப்பு!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் - அச்சுவேலி நகர் பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் வாரத்தை முன்னிட்டு அச்சுவேலி நகர் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிப்பு!

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் தற்போது அனுஷ்டிக்கப்படு வருவதுடன் மாவீரர் நாள் நவம்பர் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. 

 இதனையொட்டி அச்சுவேலி நகர் பகுதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.